செய்திகள்

அறிக்கைகள்

கட்டுரைகள்

நேர்காணல்கள்

ஒளிப்படங்கள்

  .

 

 இன்றைய வானிலை

மட்டக்களப்பு

உயர்: 29 °C

குறை: 26 °C

கொழும்பு

உயர்: 31 °C

குறை: 23 °C

யாழ்ப்பாணம்

உயர்: 31 °C

குறை: 23 °C

திருகோணமலை

உயர்: 29 °C

குறை: 26 °C

மன்னார்

உயர்: 33 °C

குறை: 22 °C
 முந்தைய செய்திகள்
 

»  கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நேரம்: 08-02-2010, 22:30 GMT

சரத் பொன்சேகா கைது

[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவக் காவல்துறையினர் சற்று நேரத்திற்கு முன்னர் கைது செய்ததாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இராணுவக் குற்றச் செயல்களின் அடிப்படையில் பொன்சேகாவை கைது செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜகீய மாவத்தையில் அமைந்துள்ள காரியாலயத்தில் வைத்து பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் அவரது ஊடகப் பேச்சாளர் சேனக சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி செய்தியை பிபிசியும் தனது இணையயத் தளத்தில் வெளியிட்டுள்ளது. »
மேலும்»

 

பொத்துவில் பொலீஸ் பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி எதிர்ப்பு ஊர்வலம்

[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் திடீர் இடமாற்றத்தைக் கண்டித்து பொத்துவில் பொதுமக்களால் எதிர்ப்பு பேரணி ஊர்வலமொன்று நேற்றுக்காலை 9மணியளவில் நடத்தப்பட்டுள்ளது. அறுகம்பை பிரதானவீதியின் களப்புக்கட்டு சந்தியில் ஆரம்பமான கண்டன பேரணி ஊர்வலம் பொத்துவில் பொலீஸ் நிலையம்வரை சென்று பொத்துவில் பிராந்தியத்திற்குப் பொறுப்பான உதவி பொலீஸ் அத்தியட்சகர் பிரசன்னவிடம் இடமாற்றத்தை இரத்துச் செய்யக்கோரும் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பொலீஸ் மாஅதிபர், அம்பாறை மாவட்ட பொலீஸ் அத்தியட்சகர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கும் இம்மகஜர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நடந்து முடிந்த தேர்தலின்போது பொத்துவில் பிரதேசத்திலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் இவர் பாரபட்சமற்ற வகையில் சேவையாற்றியதால் அவரது இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு பொதுமக்கள் குறித்த மகஜரில் கேட்டுக் கொண்டுள்ளனர். »மேலும்»

 

ஆவணங்களை காண்பித்து வாகனங்களை திரும்ப பெறலாம்: யாழ் ஆயர்

[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

இலங்கையின் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற போர் காரணமாக பொதுமக்களின் சொத்துக்கள், வாகனங்கள் என்பன எங்கும் சிதறிக்கிடந்ததைத் தாங்கள் கண்டதாக அண்மையில் அந்தப் பகுதிகளுக்கு போருக்கு பிறகு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ள யாழ் ஆயர் தாமஸ் சௌந்தரநாயம் அவர்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இராணுவத்தின் அனுமதியோடு, அவர்களது வழித்துணையுடன் சென்று இந்த இடங்களைப் பார்வையிட்டதாகத் தெரிவித்த ஆயர் அவர்கள், முள்ளியவளை, தண்ணீரூற்று போன்ற பகுதிகளில் பெரும் எண்ணிக்கையான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை நேரில் கண்டதாகவும் கூறினார்.

இந்த வாகனங்கள் தற்போது அந்தப் பகுதி அரசாங்க அதிபரின் பொறுப்பில் இருப்பதாகவும், உரிமையாளர்கள் உரிய ஆவணங்களைக் காட்டி அவற்றைப் »
மேலும்»

 

பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். கோத்தபாய.

[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

கடந்த தேர்தலில் அரசியலில் ஈடுபட்ட பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச டெய்லி நியூஸ்பேப்பருக்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின்போது ஜெனரல் சரத் பொன்சேகா வெல்வார் என்ற எதிர்பார்ப்பில் பல பொலிஸார் ஒன்றிணைந்து எதிர்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு சார்பாக செயல்பட்டுள்ளனர் எனவும், இவர்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் என நிரூபிக்கப்படுமிடத்து சேவையிலிருந்து நீக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அவர்கள் தேர்தல் முடிந்த மறுகணம் 208 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும்படியான இடமாற்றங்கள் வழங்கப்பட்டிருந்தது. சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர்களான கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் இயக்குனரும் மேலதிக பொலிஸ் பேச்சாளருமாக செயற்பட்டுவந்த நிமால் மெதிவக்க, வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லெவ்கே, மற்றும் சிரேஸ்ட டிஐஜி, எஸ்எஸ்பி, எஸ்பி, ஏஎஸ்பி க்கள் உட்பட 99 உயரதிகாரிகளும் 109 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாதிகளும் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். »
மேலும்»

 

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா எண்ணிக்கையை குறைக்க பிரிட்டன் முடிவு

[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பதென பிரிட்டன் முடிவு செய்துள்ளது இரு வாரங்களுக்குள் இப்புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவுள்ளன. மாணவ விசாக்களை வழங்குவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு ஆங்கிலம் பேசும் ஆற்றல் இருக்கவேண்டும் என்பதும், குறுகியகால பிரிட்டிஷ் கற்கை நெறிகளுக்கு வருவோர் அவர்களில் தங்கியிருப்போரையும் தம்முடன் அழைத்து வருவதை தடைசெய்தல் போன்றவை உட்பட பல கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். உண்மையாக கல்விகற்க வருவோரை இலக்குவைத்து இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவில்லை என்று தெரிவித்த அவர், தொழில் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு பிரிட்டன் வருவோருக்காகவே இந்நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார். தோல்வியில் முடிவடைந்த சிக்காகோ விமானக் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் கோர்டன் பிரவுணின் உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டையடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறதெனவும் அமைச்சர் கூறியுள்ளார். மேற்படி நத்தார்தின »மேலும்»

 

மனித உரிமைகள் அமைச்சர் ஜெனிவா பயணம். ஐ.நா விற்கு விளக்கமளிப்பாராம்.

[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

முன்னாள் இராணுவத் தளபதியும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டவருமான ஜெனரல் பொன்சேகா வெளியிட்டுள்ள இரு கருத்துக்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் காப்பகத்திற்கு விளக்கமளிப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனிவா சென்றுள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

போரின் இறுதிக் கட்டத்தின் போது புலிகளின் தலைவர்கள் சரணடையும் பொருட்டு வெள்ளை கொடிகளை உயர்த்தியவாறு சரணடைய முற்பாட்டதாகவும் , தேர்தலின் போது மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்த இரு கருத்துக்கள் தொடர்பாகவும் ஐ.நா விற்கு விளக்கமளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அமைச்சருடன் சட்டத்தரணி மொஹான் பீரிசும் சென்றுள்ளதாக தெரியவருகின்றது. »
மேலும்»

 

இலங்கையின் புராதன துறைமுக கட்டமைப்பு தொடர்பான ஆகழ்வாராய்ச்சிகள் ஆரம்பம்

[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

இலங்கையைக் கேந்திர நிலையமாகக் கொண்டு இந்து சமுத்திரத்தில் அமைந்திருந்த புராதன துறைமுக கட்டமைப்பு தொடர்பான அகழ்வாராய்ச்சிகளை தொல்பொருள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தை இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், ரூஹ_ணு பல்கலைக்கழகம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியன கூட்டாக நடைமுறைப்படுத்துவதாக திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிமல் பெரேரா தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக மன்னார் புராதன மாதோட்டம் துறைமுகம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது பற்றிய அகழ்வாராய்ச்சிகளின்போது சுமார் 3ஆயிரத்து 700வருடங்களுக்கு முன்னரான காலத்தில் துறைமுகம் அமைந்திருந்தமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கலாநிதி நிமல் பெரேரா தெரிவித்துள்ளார். கற்களால் செய்யப்பட்ட ஆயுதங்கள், றோம் மற்றும் சீன நாணயங்கள் என்பனவும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மேலும் பல புராதன துறைமுகங்களை அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளதாக தொல்பொருள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிமல் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார். »மேலும்»

 

பயங்கரவாதத்தால் பிளவுபட்டிருந்த மனங்களை மீண்டும் ஐக்கியப்படுத்தும் நடவடிக்கையுடன் இணையுமாறு ரஸ்யா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

பயங்கரவாதத்தால் பிளவுபட்டிருந்த மனங்களை மீண்டும் ஐக்கியப்படுத்தும் நடவடிக்கையுடன் இணையுமாறு ரஸ்யா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். முழு உலகிற்கும் அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நாட்டினுள் மீண்டும் சமாதானம் மற்றும் அபிவிருத்தி என்பன ஏற்பட்டுவரும் நிலையில் ரஸ்யாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மொஸ்கோ மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் என்னும் லுமும்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ரஸ்ய இலக்கியமும், கலாச்சாரமும் சுமார் 50வருடங்களுக்கு முன்னர் இலங்கையுடன் நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருந்ததாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். அந்த நிலைமையை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதன்மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான கலாச்சார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்குமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த விழாவில் கருத்து வெளியிட்ட மொஸ்கோ மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பிலிபோச், உலக சமாதானத்திற்காக »மேலும்»

 

யு.எஸ்.: மின் நிலைய வெடி விபத்தில் 50 பேர் பலி!

[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

அமெரிக்காவில் மின்நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 50 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாகாணத்தில், மிடில் டவுண் என்னுமிடத்தில் நிறுவப்பட்டு வரும் மின் நிலையத்தில் வாயுக்கலன் ஒன்று வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் 5 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மேலும் பணியிலிருந்த 45 க்கும் அதிகமானோரின் நிலைமை என்ன என்று தெரியவில்லை.இதனால் அவர்களும் பலியாகி இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அங்கு சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த வெடிவிபத்தினால் ஏற்பட்ட நெருப்பு ஜுவாலை ஏறத்தாழ 48 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சிதறியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். »
மேலும்»

 

யானை - அன்னம் சின்னம் தொடர்பில் எதிர்க்கட்சிகளிடையே முரண்பாடு

[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

கட்சி சின்னம் தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கிடையில் முரண்பாடான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட அதிக நாட்டம் காட்டுவதாகவும், ஜே.வி.பி யானைச் சின்னத்தின்கீழ் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அன்னபட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே ஜே.வி.பி.யின் நிலைப்பாடாக காணப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட்டால், ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் ஏனைய கட்சிகளின்; ஆதரவுடன் ஜே.வி.பி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடுமாறு ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் அவர் எவ்வித பதிலையும் தெரிவிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அன்னப்பட்சி சின்னத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை தேர்தலில் களமிறக்கும் முயற்சிகளை பொன்சேகா மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யானைச் சின்னம் தொடர்பில் ஜே.வி.பியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலின்N பாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஜே.வி.பி மேற்கொண்ட »மேலும்»

 

ஏப்பிரல் 8ம் திகதி பாராளுமன்ற தேர்தல்!

[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

ஏதிர்வரும் ஏபிபிரல் 8ம் திகதி பாராளுமன்றத்திற்கான தேர்தலை நடாத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகவும், ரஷ்யாவுக்கான பயணத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியதும் தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய பாராளுமன்றத்திற்கான தேர்தல் அறிவிக்கப்படும் என அரச வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. »மேலும்»

 

வட, கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் மலையக மக்கள் விடயத்தில் தலையிடுவதை தவிர்க்க வேண்டுமென டி.வி.சென்னன் தெரிவிப்பு

[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமேயன்றி மலையகத் தமிழ் மக்கள் விடயத்தில் தலையீடு செய்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மலையக தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு மலைய தமிழ் அரசியல்வாதிகளாக நாமிருந்து வருகின்றோம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் ஆலோசகர் டி.வி.சென்னன் தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற தோட்டமட்டத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அடங்கிய விசேட கூட்டத்தில் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் வட, கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர். இவ்விடயத்தில் இ.தொ.கா எவ்வகையிலும் கசப்புணர்களை மேற்கொள்ளவில்லை. அதனை நாம் ஆட்சேபிக்கவுமில்லை. மலையக தமிழ் மக்களைவிட வட, கிழக்கு மாகாண தமிழ்மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதுடன் சொல்லொணாத் துயரங்களையும் அனுபவித்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக வடபகுதி தமிழ்மக்களின் அவல நிலையினை கண்டு மலையக அரசியல்வாதி என்றமுறையில் பெரும் வேதனையடைந்து வருகிறோம். ஆனால் அப்பிரச்சினை தீர்;விற்கு எம்மால் எதனையும் செய்யமுடியாத நிலையிலிருக்கிறோம். நிலைமை இவ்வகையிலிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறியிருப்பது வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கிறது. மலையக தமிழ் »மேலும்»

 

ஊடக அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்!

[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

ஊடக அடக்கு முறைக்கு எதிராக இன்று மதியம் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தவுடன் ஊடகங்களுக்கு எதிராகவும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் முடுக்கிவிடப்பட்டுள்ள அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஊடகவியலாளர் தொழிற்சங்க கூட்டமைப்பு, ஊடக அடக்குமுறைக்கு எதிரான அமைப்பு, உட்பட ஊடக அமைப்புக்கள் பலவும் இணைந்தே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

“லங்கா ஈ நியூஸ் பத்திரிகையின் ஊடகவியலாளர் பிரகீத்தை விடுதலைசெய்”, “லங்கா பத்திரிகை ஊடகவியலாளர் சந்தன சிறமல்வத்தையை விடுதலைசெய்”,”ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக நிறுத்து”, “சுதந்திர ஊடகத்தை கட்டுப்படுத்துவதை நிறுத்து” போன்ற கோஷங்களை ஊடகவியலாளர்கள் எழுப்பியதைக் காணமுடிந்தது.

அண்மைக்காலத்தில் கொழும்பில் ஊடகவியலாளர்கள் நடத்திய பாரிய ஆர்ப்பாட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சுதந்திர ஊடவியலாளர்களுக்கான தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் தர்மசிறி லங்கா பேலி கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டிலுள்ள »
மேலும்»

 

இரானுக்கு மேற்கத்தைய நாடுகள் கண்டனம்

[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

இரானிய அரசு யூரேனியம் செறிவூட்டலை மிக உயர்ந்த தரத்திற்கு மேற்கொள்ளவிருப்பதாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவித்தல் குறித்து மேற்கத்தைய நாடுகள் மிகவும் கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளன. இதற்கு அடுத்த கட்டம் இரான் அணு ஆயுதம் தயாரிப்பது தான் என்று மேற்குலக அரசுகள் கருதுகின்றன. இரானின் நடவடிக்கையை பிரிட்டனும் ஜெர்மனியும் கண்டனம் செய்துள்ளன.

இரான் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் அதன் மீது ஏற்றுமதி தடைகளை நடைமுறைப்படுத்த அனைத்துலக நாடுகள் இனி முயல வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே அமெரிக்க உதவியுடன் நடத்தப்படும் பாரசீக மொழி வானொலியுடன் தொடர்புடையவர்கள் என்றும், அமெரிக்காவுக்கு ஒற்றர்களாக வேவு பார்த்தவர்கள் என்றும் இரானியர்கள் சிலரை இரான் அரசு கைது செய்துள்ளது. »
மேலும்»

 

தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளையும் மே மாதத்துடன் விடுவிக்க ஏற்பாடு

[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மே மாதத்துடன் விடுவிக்கப்படுவார்கள் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஜகத் வெல்லவத்த இதனைத் தெரிவித்துள்ளார். ஒருவருட புனர்வாழ்வு திட்ட முடிவின்பின் அவர்கள் அனைவரும் அரசாங்கத்தினால் பெற்றோரிடம் கையளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தற்போது புனர்வாழ்வு பெற்று வருகின்ற முன்னாள் போராளிகளில் 40சத வீதமானவர்கள் 18வயதுக்கும் குறைவானவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 11,000 போராளிகள் தற்போது புனர்வாழ்வு பெற்று முகாம்களில் காணப்படுகின்றனர். இந்நிலையில் சிறுவர் போராளிகளை விடுவிப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் பேச்சுவார்த்த நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். »மேலும்»

 

உலக வர்த்தகமைய தாக்குதலுக்கு முன்னதாகவே சதாம் உசேனை அகற்ற பிரிட்டன் ரகசிய திட்டம் புதிய தகவலால் பரபரப்பு, ஏகாதிபத்தியங்களின் இரட்டைவேடம் அம்பலம்.

[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு முன்னதாகவே, அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேனை பதவியில் இருந்து அகற்றுவதற்கு, பிரிட்டன் ரகசிய திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது கடந்த 2001 செப்டம்பரில் அல்குவைதா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில், அந்த கட்டடம் தரை மட்டமாகியது. இதைத் தொடர்ந்து, ஈராக் மீது அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகள் தாக்குதல் நடத்தின. தலைமறைவான அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேனை, அமெரிக்க ராணுவம் கைது செய்தது. இதையடுத்து, அவர் மீது ஈராக் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, தூக்கில் போடப்பட்டார்.

ஆனால், அமெரிக்க உலக வர்த்தக மையதாக்குதலுக்கு முன்னதாகவே, ஈராக் அதிபர் பதவியில் இருந்து சதாம் உசேனை அகற்றுவதற்கு பிரிட்டன் அரசு ரகசிய திட்டமிட்டதும், இது தொடர்பாக ஈராக்கில் உள்ள சதாம் எதிர்ப்பாளர்களுடன் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டதும் தற்போது தெரியவந்துள்ளது.இந்த உடன்படிக்கையின் நகல் ஒன்று தற்போது கைப்பற்றப்பட்டு, வெளி உலகிற்கு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அப்போதைய பிரித்தானிய பிரதமர் டோனி பிளேருக்கும், சதாம் உசேன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே இந்த உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஈராக் நாட்டுக்கும், மக்களுக்கும் பிரிட்டன் எப்போதும் ஆதரவாக இருக்கும். ஈராக் மக்களுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது. ஈராக் மக்களின் உரிமைகளை காக்கவும், அங்கு நிரந்தர அமைதி ஏற்படவும், அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை ஏற்படுத்துவதற்கும் பிரிட்டன் உதவும். அடக்கு முறையில் இருந்தும், அநியாயமாக கைது செய்யப்படுவதில் இருந்தும் ஈராக் மக்களை காப்போம். இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி, சதாம் உசேன் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டால், ஈராக்குடன் எண்ணெய் கிணறு தொடர்பான ஒப்பந்தம் »
மேலும்»

 

மீண்டும் தலைதூக்கியுள்ள டெங்கு அபாயம்!

[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

நாடெங்கும் டெங்குக் காய்ச்சல் மீண்டும் தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த வருடத்தில் டெங்கு நோய் மோசமாகப் பரவியிருந்தது. டெங்கு நோய்க்குள்ளாகி கடந்த வருடம் மரணமடைந்தோரின் எண்ணிக்கை முந்நூறுக் கும் மேலானதாகும். அதேசமயம் கடந்த வருடத்தில் இந்நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முப்பத்து நாலாயிரத்தையும் தாண்டியிருந்தது.

கடந்த வருட இறுதியில் இந்நோயின் தாக்கம் சற்றுத் தணிந்தி ருந்த போதிலும், இவ்வருடம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இருபத்தைந்து ஆகும். நோயினால் பீடிக்கப்பட்டோர் மூவாயிரத்தையும் தாண்டி விட்டனர்.

ஏ. எச். 1 என். 1 என்ற பன்றிக் காய்ச்சலின் அச்சுறுத்தலில் இருந்து எமது நாடு தற்போது ஒருவாறு விடுபட்டு விட்டது. பன்றிக் காய்ச்சல் பரவும் வேகம் தற்போது வெகுவாகக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆனாலும் டெங்கு நோயானது அவ்வப்போது கட்டுப்பாட்டுக்குள் வருவதும் மீண்டும் தலைதூக்குவதும் வழமையாகியுள்ளது.

ஒருமாத காலத்தினுள் இந்நோயினால் இருபத்தைந்து பேர் மரணமடைவதென்பது மிகவும் பாரதூரமான விடயமாகும். சராசரியாக நோக்குகையில் டெங்குக் காய்ச்சலினால் தினமும் ஒருவர் மரணமடைவதாக எடுத்துக் கொள்ள வேண்டி »
மேலும்»

 

சுதந்திரக் கட்சி வேட்பாளர் தெரிவு நேர்முகப்பரீட்சை இன்றும் நாளையும் ஐ.ம.சு.மு. கூட்டுக் கட்சிகள் வெற்றிலை சின்னத்தில் களமிறங்க முடிவு

[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.இம்முறை தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியில் உள்ள சகல கட்சிகளும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடவுள்ள தாகவும் கூட்டுக்கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்கள் கிடைத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து சகல கூட்டுக் கட்சிகளுடனும் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக மூன்று வேட்பு மனுக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் இன்றும் (8) நாளையும் (9) கொழும்பு மகாவலி நிலையத்தில் இடம்பெற உள்ளதாகவும் அமைச்சர் »
மேலும்»

 

வடக்கு அரச நிறுவனங்களில் மும்மொழி பெயர்ப் பலகை ரூ. 75 இலட்சம் அமைச்சு ஒதுக்கீடு

[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

வடக்கிலுள்ள சகல அரசாங்க நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்க விடுவதற்காக நிதி ஒதுக்கியுள்ளதாக அரசியல் விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் நேற்று தெரிவித்தது.

இதன்படி வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சு செயலாளர் திருமதி எம். எஸ். விக்ரமசிங்க தெரிவித்தார்.

மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகளை பொருத்த 75 இலட்சம் ரூபா வழங்கப்பட்டு ள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சகல அரச நிறுவனங்களிலும் மும் மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை பொருத்துவதில் வட மாகாணத்திலுள்ள மாவட்ட செயலாளர்கள் மிகவும் கரிசனை யாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வட மாகாணத்தில் உள்ள அரச ஊழியர்களுக்கு இரண்டாம் மொழியான சிங்களம் மொழியை கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாக செயலாளர் தெரிவித்தார். நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்கவிட »
மேலும்»

 

சரத் பொன்சேகா மேற்கொண்ட சதி தொடர்பான விசாரணைகளை நடத்த அரசு திட்டம்

[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை கொலை செய்வதற்கான சதித் திட்டம் நடந்தபோது, ஓட்டலில் சரத் பொன்சேகா உடன் இருந்த பத்திரிகையாளர்களிடமும் விசாரணை நடத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இலங்கை அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் கடந்த மாதம் 27ம் திகதி, அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்தன. தேர்தல் முடிவுகளில் பொன்சேகா பின்தங்கியிருந்தார். அப்போது, கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டலில், சரத் பொன்சேகா தனது ஆதரவாளர்களுடன் தங்கியிருந்தார். எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த சிலரும் அங்கு இருந்தனர். அந்த ஓட்டலின் 70 அறைகளில், சரத் பொன்சேகா ஆதரவாளர்கள் தங்கியிருந்தனர்.

இவர்களில் சிலர், ராணுவத்தில் இருந்து வெளியேறியவர்கள்; துப்பாக்கிகளுடன் ஓட்டலில் அவர்கள் வலம் வந்தனர்.இலங்கை அதிபர் ராஜபக்ஷேவையும், அவரது குடும்பத்தினரையும் தீர்த்துக் கட்டுவதற்கு, இந்த ஓட்டலில் சதி நடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, அந்த ஹொட்டலை ராணுவம் சுற்றி வளைத்தது. துப்பாக்கிகள் வைத்திருந்த சிலரை, ராணுவ வீரர்கள் கைது செய்தனர். அவர்களிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சில முக்கிய இடங்களில் இருந்து »
மேலும்»

 

அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி .

[ஞாயிற்றுக்கிழமை, 07-02-2010, 23:55 GMT]

இந்தியாவின் நவீன ஏவுகணையான 'அக்னி-3' இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அது தனது இலக்கைத் துல்லியமாக தாக்கியது.ஒரிசா கடலோரத்தில் உள்ள வீலர்ஸ் தீவில் இச்சோதனை இன்று நடத்தப்பட்டது.

அணுஆயுதம் பொருத்தக்கூடிய வசதியுள்ள இந்த ஏவுகணை 3000 கி.மீ. வரை பாய்ந்து செல்லும் ஆற்றல் பெற்றதாகும். இந்த ஏவுகணை இந்தியாவின் சொந்தத் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. »
மேலும்»

 

யாழ். கே.கே.எஸ். வீதி விஸ்தரிப்பு திட்டம் :இந்து மாமன்ற பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருடன் சந்திப்பு!

[ஞாயிற்றுக்கிழமை, 07-02-2010, 23:55 GMT]

யாழ். நகரிலிருந்து காங்கேசன்துறை செல்லும் பிரதான வீதியை அகலப்படுத்தி விஸ்தரிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதகாவும் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் நிலையிலிருப்பதாகவும் தெரியவருகிறது. இந்த விஸ்தரிப்புத் திட்டத்தின்படி, இந்த பிரதான வீதியில் உள்ள 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசார நினைவுச் சின்னங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதை அறிந்து யாழ். இந்து மக்களும் இந்து நிறுவனங்களும் அதிர்ச்சியடைந்த நிலையில் இது விடயத்தை அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உடனடிக் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றார்கள்.

இது தொடர்பாக இந்து மாமன்றத் தலைவரும் திருக்கேதீஸ்வர ஆலய அறங்காவலர் சபைத் தலைவருமான வி. கயிலாசபிள்ளை, பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபையின் பொருளாளார் திருமதி அ. கயிலாசபிள்ளை ஆகியோர் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறியை 5ம் திகதி வெள்ளிக் கிழமை மாலை கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் அவசரமாக சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்கள்.

வீதி விஸ்தரிப்பு திட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள நிபுணர்களிடம் பெறுமதியான மாற்றுத் திட்டங்கள் இருப்பதை அறிவதாகவும் அத்தகைய மாற்றுத் திட்டங்களைப் பாவித்து உத்தேச வீதி விஸ்தரிப்பு திட்டத்தை மாற்றியமைத்து யாழ்மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்படியும் அந்த மகஜர் »
மேலும்»

 

அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் டியூ.குணசேகர தெரிவிப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 07-02-2010, 23:55 GMT]

நாடு எதிர்நோக்கும் அநேகமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசியலமைப்பு அலுவல்கள் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளும்வரை தேர்தல் வன்முறைகளை நிறுத்தமுடியாதென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடு எதிர்கொள்ளும் அநேகமான பிரச்சினைகள் அரசியலமைப்பு காரணமாகவே ஏற்பட்டுள்ளன. தற்போது நடைமுறையிலுள்ள விருப்புவாக்கு தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தும்வரை தேர்தல் வன்முறைகள், கட்சி தாவுதல் போன்றவற்றைத் தவிர்க்க முடியாது. பல்வேறு அரசியல் கட்சிகளின்கீழ் செயற்பட்டதால் கிடைத்துள்ள அனுபவத்திற்கமைய புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டு வருவதற்காக உரிய காலம் வந்துள்ளது. அடுத்த பாராளுமன்றத்தில் இது தொடர்பாக முக்கிய கவனம் செலுத்த வேண்டுமென கருதுகிறேன். புதிய பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டவுடன் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். காலம் கடத்தினால் இந்தத் தேவையினை நிறைவேற்றிக் கொள்வதில் மீண்டும் தாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். »மேலும்»

 

தமிழர்கள் தவறாக வழி நடத்தப்பட்டுள்ளனர்-ஈ. பி. ஆர். எல். எப். ஸ்ரீதரன்!

[ஞாயிற்றுக்கிழமை, 07-02-2010, 23:55 GMT]

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களில் பெரும்பாலானவர்களின் பிரதிபலிப்புக்கள் பற்றி பல்வேறு வியாக்கியானங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. எனினும் முக்கியமான விடயம் என்னவெனில் தேசிய அளவிலான தேர்தல் ஒன்றில் தமிழ் மக்கள் பல தசாப்தங்களுக்குப் பின்னர் வாக்களித்தது என்பதே இங்கு முக்கியமான விடயம்.

ஜனாதிபதியும் அதனை குறிப்பிட்டிருந்தார். தேர்தல்களில் மக்களை பங்குபற்ற ஊக்கப்படுத்தப்படுவது சமூக விழிப்புணர்ச்சி நடவடிக்கையின் ஒரு முக்கியமான அம்சமாகும். நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் ஒரு பகுதியினர் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கின்றனர். ஜெனரல் பொன்சேகாவே வெற்றி பெறுவார் என வதந்தி பரப்பப்பட்டதும் இதற்குக் காரணமாகும்.

எனினும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஆன்மீகத் தலைவர்கள், தமிழ் புத்திஜீவிகள், யாழ். பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஆகியன பொறுப்புணர்வுடன் கூடிய அறிக்கைகளை விடுத்திருந்தனர்.

பகிஷ்கரிப்பதோ, தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதோ தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் பயக்கப் போவதில்லை என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனாலும் மாற்றம் வேண்டும் என்ற கதை பரவலாக இருந்தது. ஆனால் »
மேலும்»

 

விசா விடயமாக கைதுசெய்யப்படும் வெளிநாட்டவர்கள் மீண்டும் வருவதைத் தடுக்கும் வகையில் விசேட நடவடிக்கை

[ஞாயிற்றுக்கிழமை, 07-02-2010, 23:55 GMT]

சுற்றுலா விசாமூலம் இலங்கைக்கு வருகைதந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் நிலையில் கைதுசெய்யப்படும் வெளிநாட்டவர்கள் மீண்டும் நாட்டுக்குள் வருவதைத் தடுக்கும் வகையில் கறுப்புப் பட்டியலில் அவர்களது பெயர்களைப் பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்;வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி இலங்கைக்கு வருகைதந்து தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் பல்வேறு பகுதிகளிலும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பி.பீ.அபேகோன் தெரிவித்துள்ளார். கொழும்பு, திருமலை, மட்டக்களப்பு, கல்முனை மற்றும் அம்பாந்தோட்டை போன்ற பகுதிகளிலேயே அதிகளவிலான வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி 90நாட்கள் மாத்திரமே நாட்டில் தங்கியிருப்பதற்கான அனுமதியுள்ளதாக தெரிவித்த அவர், சில வெளிநாட்டவர்கள் அந்த சட்டத்தை மீறும் வகையில் தங்க ஆபரண கைத்தொழிலிலும், வியாபாரம் மற்றும் பாலியல் என்பவற்றிலும் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய வெளிநாட்டவர்களைக் கைதுசெய்து நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அவர்கள் மீண்டும் நாட்டிற்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும்வகையில் கறுப்புப்பட்டியலில் அவர்களது பெயர்களை »மேலும்»

 

கொழும்பு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 115கைதிகளுக்கு புனர்வாழ்வு

[ஞாயிற்றுக்கிழமை, 07-02-2010, 23:55 GMT]

தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட சிலருக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள 115 கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் பொருட்டு அவர்களைப் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஏ.ஆர்.டீ.சில்வா தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட 96பேர் கடந்த ஜனவரிமாதம் விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதம நீதியரசரின் ஆலோசனைக்கமையவே இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளர். இவர்கள் அவசரகால சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறைவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. »மேலும்»

 

ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை காண முடியும்-புளொட் சித்தார்த்தன்!

[ஞாயிற்றுக்கிழமை, 07-02-2010, 23:55 GMT]

முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான சித்தார்த்தன் கருத்து தெரிவிக்கையில். தமிழ் மக்களை பொறுத்தமட்டில் தமிழ் மக்கள் தமிழ் தேசியத்திற்கு வாக்களித்தார்கள் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கோ அல்லது ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கோ வாக்களித்திருக்கிறார்கள். இந்த இருவரும் தமிழ் தேசியத்தை முற்று முழுதாக நிராகரிப்பவர்கள்.

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே அரசின் மீதுள்ள தமது விருப்பு வெறுப்பை காட்ட வேண்டுமென்று எண்ணியிருந்தார்கள். தேர்தல் அறிவித்ததும் ஒரு பகுதியினர் ஆதரிப்பதற்கும் பெரும்பகுதியினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்ப்பதற்குமான விருப்பை கொண்டிருந்தார்கள் என்பதனை காணக்கூடியதாக இருந்தது. பெரும்பாலானவர்கள் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று தெரிந்திருந்தும் எமது கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது என்று முடிவெடுப்பதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

இடம் பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமாக அனைத்து கட்சிகளும், சர்வதேசமும் குறுகிய காலத்தில் இது நடைபெறாது என எதிர்ப்புக் குரல்கள் வெளிக்கொணர்ந்த வேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆறு மாதங்களுக்குள் மீள் குடியேற்ற வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்று எங்களுக்கு »
மேலும்»

 

கோவையில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு ஆரம்பம்

[ஞாயிற்றுக்கிழமை, 07-02-2010, 23:55 GMT]

இந்தியா, கோயம்புத்தூரில் நேற்றையதினம் உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு ஆரம்பமானது. இரு தினங்கள் இம்மாநாட்டை நடத்துவதற்கான அனுமதியை சட்டரீதியாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளதாக அமைப்பின் தலைவர் கே.கிருஸ்ணசாமி தெரிவித்துள்ளார். இந்த உலகத் தமிழர் மாநாட்டில் முதல் அமர்வில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகள் பங்கு கொண்டுள்ளன. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சிங்கப்பூர் பிரதிநிதி சிவகாமிதேவி, தமிழர் உலகில் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கெதிரான எந்தவிதமான வன்செயல்களையும் அனுமதிக்க முடியாதென தெரிவித்துள்ளார். எமது இந்த நிலைப்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு ஏற்றவகையில் மேலும் பல பெண்கள் முன்வர வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்டநிலையை ஒரு பாடமாக கொண்டு உலகத் தமிழர்கள் தம்மை எவரும் தொடுவதற்கு அனுமதிக்க முடியாதவாறு ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கே.கிருஷ்ணசாமியால் ஒழுங்கு செய்யப்பட்ட இம்மாநாட்டை மலேசியாவின் பினாங் பிரதி ஆளுநர் பி.ராமசாமி வைபவரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளார். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை பாதுகாப்பதற்காகவே இவ்அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று பினாங் பிரதி ஆளுநர் பி.ராமசாமி இதன்போது செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். »மேலும்»

 

பொது தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அவசரகாலச் சட்டம் அவசியமில்லை:பெஃப்ரல் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது!

[ஞாயிற்றுக்கிழமை, 07-02-2010, 23:55 GMT]

நாடாளுமன்றத்தில் அவசகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது குறித்து நியாயமானதும் நேர்மையானதுமான தேர்தலுக்கான அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.இது குறித்து பி.பிசி.தமிழோசையிடம் கருத்து தெரிவித்துள்ள பெஃப்ரல் அமைப்பின் நிரிவாக இயக்குனர் ரோஹன ஹெட்டியாராச்சி,”இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. ஜனாதிபதித் தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது.

குறுகிய காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலும் நடக்கப் போகிறது எனவே இப்போது இது போன்ற அவசர கால நிலையை நீடிக்க தேவையில்லை” எனத் தெரிவித்தார். அதே நேரம் அவசர கால நிலை காரணமாக தேர்தல் நடைமுறைகளுக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றும்,ஆனாலும் சில நேரங்களில் அரசியல் நோக்கங்களுக்காக இதை துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.அவசர நிலை சட்டம் துஷ்பிரோயகம் செய்யப்பட்டதாக தமக்கு இதுவரை நேரடிப்புகார்கள் வரவில்லை என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார். »
மேலும்»

 

இலங்கைக்கு நேற்று ஐந்து தங்கப் பதக்கங்கள்

[ஞாயிற்றுக்கிழமை, 07-02-2010, 23:55 GMT]

பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் நடைபெற்று வரும் 11 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை நேற்று 5 தங்கப் பதக்கங்களை சுவீகரித்தது.

ஆண்களுக்கான 4×100 மீட்டர் அஞ்சலோட்டம், பெண்களுக்கான4×100 மீட்டர் அஞ்சலோட்டம், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம், ஆண்களுக்கான கராட்டே. பெண்களுக்கான உயரம் பாய்தல் ஆகிய போட்டிகளிலேயே இலங்கை நேற்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்தது.

போட்டியின் 9 வது நாளான நேற்று பதக்கப் பட்டியலில் இந்தியா 67 தங்கம் 39 வெள்ளி 22 வெண்கலம் என மொத்தம் 128 பதக்கங்களுடன் முதல் இடத்திலும் பாகிஸ்தான் 17 தங்கம் 23 வெள்ளி 27 வெண்கலம் என மொத்தம் 67 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், பங்களாதேஷ் 14 தங்கம் 19 வெள்ளி 44 வெண்கலம் என மொத்தம் 77 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் இலங்கை 12 தங்கம் 26 வெள்ளி 35 வெண்கலம் என மொத்தம் 73 பதக்கங்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளன. »
மேலும்»

 

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை இரத்துச்செய்ய ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த தீhமானம் பக்கச் சார்பானதென அரசாங்கம் தெரிவிப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 07-02-2010, 23:55 GMT]

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை இரத்துச்செய்ய எடுத்த தீர்மானமானது ஒருபக்க சார்பானதென்றும், அவ்வாறு மேற்கொள்வது நடைமுறையில் ஏற்றுக்கொள்ள முடியாததெனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெல்ஜியம், லக்சம்பேர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கான இலங்கை தூதுவர் ரவீந்த ஆரியசிங்க, இது தொடர்பில் தெரிவிக்கையில், இலங்கைக்கான ஆடைகோட்டா ஏற்றுமதி சலுகையை நிறுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகபூர்வ முடிவு எதனையும் அறிவிக்கவில்லையென்று குறிப்பிட்டுள்ளார். மனிதஉரிமை மீறல்கள் மற்றும் அது தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்ற அடிப்படையிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இச்சலுகையை இரத்துச்செய்யும் தீர்மானத்தை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. »மேலும்»

 

ஜனாதிபதி மஹிந்தவுக்கு டொக்டர் பட்டம்; ரஷ்ய பல்கலைக்கழகம் கெளரவம்

[ஞாயிற்றுக்கிழமை, 07-02-2010, 23:55 GMT]

உலக சமாதானத்துக்கு ஆற்றிய சீரிய பங்களிப்பு, பயங்கரவாதத்தை முறியடித்தமை மற்றும் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் கல்வி, கலாசாரம் உட்பட பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்தமைக்காகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மொஸ்கோ நட்புறவு (பட்ரிக் லுமும்பா) பல்கலைக்கழகம் விசேட கெளரவ டொக்டர் பட்டமொன்றை வழங்கி கெளரவித்துள்ளது.

ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் கிரெம்ளின் மண்டபத்தில் வைத்து நட்புறவு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிலிபோவ் இந்த கெளரவ டொக்டர் பட்டத்தை நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கு வழங் கினார். மொஸ்கோவின் ‘பட்ரிக் லுமும்பா’ பல்கலைக்கழகம் பின்னர் நட்புறவு பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டது.

1995 முதல் உலகில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளும் சேவைகள் தொடர்பில் அரச தலைவர்களுக்கு இந்த டொக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

இந்த வகையில் மேற்படி டொக்டர் பட்டத்தை பெறும் 6 ஆவது அரச தலைவர் »
மேலும்»

 

வன்னி மக்களின் எதிர்காலத்தை அச்சுறுத்துகிறது போர்ப் பேரழிவு:அங்கு சென்று திரும்பிய யாழ்.ஆயர் விசனம்!

[ஞாயிற்றுக்கிழமை, 07-02-2010, 23:55 GMT]

வன்னிப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள போர்ப் பேரழிவுகள் அங்கு வாழ்ந்த மக்களின் எதிர்காலத்தை அச்சுறுத்துகின்றன.வன்னிப் பகுதியின் எந்தத் திசையை நோக்கினாலும், மனதால் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு அது நாசமடைந்திருப்பதையே காணமுடிகிறது.போரினால் உண்டாகியுள்ள அதீத அழிவுகளைப் புனரமைப்பதும், புனர்வாழ்வு பெறுவதும் அந்த மக்களுக்குத் தாங்க முடியாத பளுவைச் சுமத்தியுள்ளது.இவ்வாறு கவலை தெரிவித்திருக்கிறார் ஜனவரி மாத இறுதியில் வன்னிப் பகுதிக்கு விஜயம் செய்திருந்த யாழ்.ஆயர் அதி வண. தோமஸ் சௌந்தரநாயகம்.

யாழ்.ஆயர் அதிவண. தோமஸ் சௌந்தரநாயகம் கடந்த மாதம் 29 ஆம் திகதி படையினரின் அனுமதியுடன் வன்னி சென்றிருந்தார்.கிளிநொச்சி, மாங்குளம், ஒட்டிசுட்டான், புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருந்த அவர் அங்கு மீளக்குடியமர்ந்த மக்களின் நிலைமைகளைக் கேட்டறிந்தார்.

தாம் சென்ற பகுதிகளில், மிகக் குறிப்பாக மாத்தளன் பகுதியில் ஏற்பட்டுள்ள அழிவுகள், கொடூரங்கள், காணப்படும் எச்சங்கள் தமது மனதை உலுக்கியதாக »
மேலும்»

 

பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம்

[ஞாயிற்றுக்கிழமை, 07-02-2010, 23:55 GMT]

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. மலையக மக்களின் எதிர்கால நலன்கருதியும், அபிவிருத்தியைக் கருத்திற் கொண்டும் அரசதரப்புடன் இணைந்து போட்டியிடுவதெனத் தீர்மானித்துள்ளதாக காங்கிரஸின் தலைவரும் தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும், மக்களின் எதிர்கால நன்மைகருதி அரசுடன் இணைந்து களமிறங்குவதாகப் பிரதியமைச்சர் கூறியுள்ளார். »மேலும்»

 

உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்த இந்திய மத்திய, மாநில அரசு கூட்டு நடவடிக்கை!

[ஞாயிற்றுக்கிழமை, 07-02-2010, 23:55 GMT]

தீவிரவாத ஊடுருவல், தீவிரவாத தாக்குதல், பொருளாதாரத்தை சீர்குலைக்க கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுதல் என நாட்டின் பாதுகாப்புக்கு ஏராளமான அச்சுறுத்தல்கள் உள்ளன. மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து கூட்டு நடவடிக்கைகள் எடுத்து இந்த அச்சுறுத்தல்களை முறியடிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

நாட்டில் பருப்பு வகைகள், சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை கடந்த சில மாதங்களாக அதிகளவில் உயர்ந்துள்ளது.

இதையடுத்து, நாட்டின் பொருளாதார நிலை, விலைவாசியை கட்டுப்படுத்துதல், உணவு தானிய உற்பத்தி, உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கும் வகையில் மாநில முதல்வர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு டெல்லியில் கடந்த மாதம் கூட்டப்பட இருந்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட »
மேலும்»

 

சகல சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம்:அரசாங்கம் முடிவு!

[சனிக்கிழமை, 06-02-2010, 23:55 GMT]

தேர்தல்களின் போது சுகாதாரத்துறையிலுள்ள சுமார் ஒரு லட்சத்து 50,000 ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம்வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.சுகாதாரத்துறையை அத்தியாவசிய சேவையாக கருத்திற் கொண்டு சகல மட்டத்திலுமுள்ள ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.

1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல், 1981 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல், 1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாணசபைகள் தேர்தல் 1989 ஆம் ஆண்டு மார்ச் திருத்தப்பட்ட 262 ஆம் சரத்தில் உள்ளூராட்சி சபைகள் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் தபால் மூலம் வாக்களிப்பதற்கு உரித்துடை யோர் பற்றிய விபரங்கள் கூறப்பட்டுள்ளன. இருப்பினும் அத்தியாவசிய சேவையாக கருதப்படுகின்ற சுகாதாரத்துறை சார்ந்த ஊழியர்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

அரசாங்க மற்றும் மாகாணரீதியில் இருக்கும் சுமார் 1,50,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுள் குறிப்பிட்ட சிலர் மட்டுமே வாக்களிப்பு நிலையத்தில் கடமைக்கு செல்வதால் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. ஆனால் பெருந்தொகையானோருக்கு வாக்களிக்க சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை.சுகாதாரத்துறையிலுள்ள டாக்டர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள், உட்பட ஊழியர்கள் சுழற்சி முறையில் சேவை செய்வதில் »
மேலும்»

 

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் TMVPயின் நிலைப்பாடு குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் இன்று தலைவர் பணிமனையில்.

[சனிக்கிழமை, 06-02-2010, 23:55 GMT]

நடைபெற உள்ள 15வது பாராளுமன்ற பொதுத்தேர்தலில் கிழக்கில் பலம் பொருந்திய அரசியல் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் என்பது தொடர்பான உயர்மட்ட ஆராய்வுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கட்சி தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெறும் இக்கூட்டத்திற்கு கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. »மேலும்»

 

சகல சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம்:அரசாங்கம் முடிவு!

[, --, : GMT]

தேர்தல்களின் போது சுகாதாரத்துறையிலுள்ள சுமார் ஒரு லட்சத்து 50,000 ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம்வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.சுகாதாரத்துறையை அத்தியாவசிய சேவையாக கருத்திற் கொண்டு சகல மட்டத்திலுமுள்ள ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.

1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல், 1981 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல், 1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாணசபைகள் தேர்தல் 1989 ஆம் ஆண்டு மார்ச் திருத்தப்பட்ட 262 ஆம் சரத்தில் உள்ளூராட்சி சபைகள் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் தபால் மூலம் வாக்களிப்பதற்கு உரித்துடை யோர் பற்றிய விபரங்கள் கூறப்பட்டுள்ளன. இருப்பினும் அத்தியாவசிய சேவையாக கருதப்படுகின்ற சுகாதாரத்துறை சார்ந்த ஊழியர்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

அரசாங்க மற்றும் மாகாணரீதியில் இருக்கும் சுமார் 1,50,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுள் குறிப்பிட்ட சிலர் மட்டுமே வாக்களிப்பு நிலையத்தில் கடமைக்கு செல்வதால் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. ஆனால் பெருந்தொகையானோருக்கு வாக்களிக்க சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை.சுகாதாரத்துறையிலுள்ள டாக்டர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள், உட்பட ஊழியர்கள் சுழற்சி முறையில் சேவை செய்வதில் »
மேலும்»

 

சகல சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம்:அரசாங்கம் முடிவு!

[சனிக்கிழமை, 06-02-2010, 23:55 GMT]

தேர்தல்களின் போது சுகாதாரத்துறையிலுள்ள சுமார் ஒரு லட்சத்து 50,000 ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம்வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.சுகாதாரத்துறையை அத்தியாவசிய சேவையாக கருத்திற் கொண்டு சகல மட்டத்திலுமுள்ள ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.

1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல், 1981 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல், 1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாணசபைகள் தேர்தல் 1989 ஆம் ஆண்டு மார்ச் திருத்தப்பட்ட 262 ஆம் சரத்தில் உள்ளூராட்சி சபைகள் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் தபால் மூலம் வாக்களிப்பதற்கு உரித்துடை யோர் பற்றிய விபரங்கள் கூறப்பட்டுள்ளன. இருப்பினும் அத்தியாவசிய சேவையாக கருதப்படுகின்ற சுகாதாரத்துறை சார்ந்த ஊழியர்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

அரசாங்க மற்றும் மாகாணரீதியில் இருக்கும் சுமார் 1,50,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுள் குறிப்பிட்ட சிலர் மட்டுமே வாக்களிப்பு நிலையத்தில் கடமைக்கு செல்வதால் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. ஆனால் பெருந்தொகையானோருக்கு வாக்களிக்க சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை.சுகாதாரத்துறையிலுள்ள டாக்டர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள், உட்பட ஊழியர்கள் சுழற்சி முறையில் சேவை செய்வதில் »
மேலும்»

 

ஹக்கீம் தலைமையிலான மு.காவை அரசுடன் இணைப்பதில்லையென ஜனாதிபதி எம்மிடம் உறுதி-ரிஷாத் பதியுதீன்!

[சனிக்கிழமை, 06-02-2010, 23:55 GMT]

ரவூப் ஹக்கீம் சார்ந்த முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிடம் தெரிவித்ததாக கட்சியின் தலைவரும் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் எதிர்காலத் திட்டங்கள் சம்பந்தமாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நிப்போன் ஹோட்டலில் நடை பெற்றது. இதன்போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களான அமைச்சர் அமீர் அலி, பிரதியமைச்சர் நிஜாமுதீன், கட்சியின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.ஸஹீட் ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் கணிசமான முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது வாக்குகளை அளித்துள்ளனர். வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்காது நிராகரித்துவிட்டதாக ஸ்ரீல.மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சொல்லித் திரிகின்றார். இதன் மூலம் முஸ்லிம்கள் ஜனாதிபதியை வெறுப்படையச் செய்து அவர்களுடைய »
மேலும்»

 

ரஷ்ய பாணியிலான சதிப்புரட்சிக்கு திட்டம் வகுத்திருந்தார் பொன்சேகா,ஜே.வி.பி.யினரே சூத்திரதாரிகள்: அரசு குற்றச்சாட்டு!

[சனிக்கிழமை, 06-02-2010, 23:55 GMT]

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அரசாங்கத்துக்கு எதிராக “ரஷ்ய பாணியிலான சதிப்புரட்சியை அரங்கேற்றுவதற்கான முயற்சியில் ஜெனரல் சரத் பொன்சேகா ஈடுபட்டதாக அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியது.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் அவரின் சகோதரர்களான கோதாபய ராஜபக்ஷ,பசில் ராஜபக்ஷ ஆகியோரையும் படுகொலை செய்த பின்னர் சகல அரசாங்க நிறுவனங்களிலும் “போல்ஷேவிக் குழுக்களை நியமிக்கும் திட்டத்தை பொன்சேகா கொண்டிருந்ததாக தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அநுர பிரியதர்சன யாப்பா நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.

ரஷ்யாவின் சோஷலிசக் கட்சியிலிருந்த கடும் தீவிரவாதப் போக்குடைய உறுப்பினர்களை உள்ளடக்கிய பிரிவை “போல்ஷேவிக் ஆகும். இப்பிரிவு 1918 இல் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியாக உருவானது.ரஷ்ய கம்யூனிஸ்ட் போக்கைக் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுன நீண்டகாலமாக நாட்டில் கடும் தீவிரவாதப் போக்கை எமது நாட்டில் கடைப்பிடிக்கும் திட்டத்துடன் செயற்பட்டு வருகின்றது. ஜே.வி.பி. தனது இந்த இலக்கில் வெற்றியடைய சந்தர்ப்பங்களை எதிர்பார்த்த வண்ணமிருந்தது. ஜே.வி.பி. ஜனநாயக அரசியலில் என்றுமே நம்பிக்கை கொண்டு செயற்படவில்லை. ஆனால், வேறுபட்டு நின்று தமது இலட்சியத்தை »
மேலும்»

 

ரஷ்யாவில் ஜனாதிபதிக்கு பெரு வரவேற்பு

[சனிக்கிழமை, 06-02-2010, 23:55 GMT]

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (06) ரஷ்யா போய்ச் சேர்ந்தார். மொஸ்கோ வினுகோஆ சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த ஜனாதிபதிக்கு அங்கு பெரு வரவேற்பளி க்கப்பட்டது.

ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக ரஷ்யா செல்லும் ஜனாதிபதி இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் நாளை (08) ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதேநேரம், 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கான இருதரப்புக் கடன் உடன்படிக்கையொன்றிலும் ஜனாதிபதி கைச்சாத்திடுகின்றார். இரு நாடுகளுக்கு மிடையிலான இரு தரப்பு உடன்படிக்கைகள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காகக் கைச்சாத்திடப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

பல தசாப்தங்களுக்குப் பின்னர் நாடொ ன்றின் தலைவர் ரஷ்யாவுக்குச் செல்வது முதற் தடவை என்பதால், ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் முக்கிய மானதாகக் கருதப்படுகிறது.

ரஷ்ய குடியரசுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மொஸ்கோவிலுள்ள வினுகோஆ சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பூச்செண்டு கொடுத்து வரவேற்கப்படுகிறார். முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர்கள் ரோஹித போகொல்லாகம, ஜீ. எல். பீரிஸ், அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் »
மேலும்»

 

14 இராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வை வழங்கினால் ஜோசித ராஜபக்ஷவும் இராஜிநாமா செய்ய வேண்டும்!

[சனிக்கிழமை, 06-02-2010, 23:55 GMT]

அரசியலில் சம்பந்தப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு 14 இராணுவ அதிகாரிகளுக்குக் கட்டாயமாக ஓய்வு வழங்குவதென அரசாங்கம் தீர்மானித்தால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரான ஜோசித ராஜபக்ஷ தனது இராஜிநாமாவை கையளிக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த குருநாகல் மாவட்ட ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர;ஜோசித ராஜபக்ஷ ஓய்வுபெற வேண்டிய முதலாவது ஆளாகவுள்ளார். அவர் அரசியல் பேரணிகளில் பங்குபற்றியதைக் காட்டுவதற்கான ஒளிநாடா,புகைப்பட ஆதாரம் உள்ளது என்று கூறினார்.

இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடுவதாகக் கூறி சில இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தமது தொழில்களை கைவிட்டுச் செல்லும் நிலையேற்பட்டுள்ளது. தேர்தலின் போது பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றி ஜனாதிபதிக்குரியதென்ற பிரசாரத்தினை அரச தொலைக்காட்சி அலைவரிசையில் படையதிகாரிகள் முன்னெடுத்தனர். கடற்படை அதிகாரியான ஜோசித ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியின் நீலப்படையணியின் பிரசாரக் »
மேலும்»

 

வவுனியா முகாம்களில் 18 நடமாடும் நூலகங்கள் : ஜப்பான் திட்டம்!

[சனிக்கிழமை, 06-02-2010, 23:55 GMT]

இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள சிறுவர்களுக்கென 18 நடமாடும் நூலகங்களை வழங்கிச் செயற்படுத்த ஜப்பான் தீர்மானித்துள்ளது. முகாம்களிலுள்ள சிறுவர்களின் கல்வி வளர்ச்சியினை நோக்காகக் கொண்டே இச்செயற்திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது.

முதற்கட்ட புத்தகங்களை வழங்கும் நிகழ்வு நாளை மறுதினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மனிக்பாம் முகாம் சிறுவர்களுக்கான நூல்களை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. »
மேலும்»

 

இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் பிரசாத்

[சனிக்கிழமை, 06-02-2010, 23:55 GMT]

பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இராணுவப் பேச்சாளராக நியமிக்க ப்பட்டுள்ளார்.

நாளை திங்கட்கிழமை முதல் இராணுவப் பேச்சாளருக்கான கட மையை அவர் பொறுப்பேற்கவுள் ளார்.

இராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் உதய நாணயக்கார இரா ணுவத்தின் பிரதம களப் பொறியி யலாளராக (Chief Field Engineer) நியமிக்கப்பட்டுள்ளதுடன் திங்கட் கிழமை முதல் அவரும் கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.

முன்னர் இராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் பிரசாத் சமர சிங்க, லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் இராணுவ ஆலோசக ராக நியமிக்கப்பட்டிருந்தார். லண் டனில் அவருக்கு வழங்கப்பட்ட நியமனத்தில் ஏற்பட்ட வெற்றிட த்திற்கே பிரிகேடியர் உதய நாணய க்கார இராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

லண்டனிலிருந்து இலங்கை வந்துள்ள பிரிகேடியர் பிரசாத் சமர சிங்க இராணுவத்தின் பிரதான தொலைத் தொடர்பு அதிகாரியாகவும் சமி க்ஞை »
மேலும்»

 

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட வேண்டியது அவசியமாகும்: பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க!

[வெள்ளிக்கிழமை, 05-02-2010, 23:55 GMT]

நாட்டில் சரியான நிலைமை ஏற்படும் வரை அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார்.இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத் தொடரில் அவசரகாலச் சட்டம் 87 மேலதிக வாக்குகளால் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டது. அவசரகாலச் சட்டப் பிரேரணையின் பின்னர் உரையாற்றியபே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விரைவில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும். அதற்கான திகதியை உரிய நேரத்தில் நாம் அறிவிப்போம். நாட்டில் சரியான நிலைமை ஏற்படும் வரை அவசரசாலச் சட்டம் நீடிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

வடக்கில் கண்ணிவெடிகளை முற்றாக அகற்றுவதற்கு விரைவான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். அவை முழுமையாக அகற்றப்படாததால் மீள்குடியேற்றத்தில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது” என அவர் »
மேலும்»

 

தப்பிச் சென்ற இராணுவத்தினரை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

[வெள்ளிக்கிழமை, 05-02-2010, 23:55 GMT]

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று குறித்த கால எல்லை க்குள் சரணடையாத இராணு வத்தினரை தேடி கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்கள் சுதந்திரத் தினத்தன்று சரணடையும் பட்சத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று இரா ணுவம் விசேட அறிவிப்பு ஒன்றை நேற்று முன்தினம் விடுத்தி ருந்தது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட விசேட காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையிலேயே சரணடையாதவர்களைத் தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள் ளது என்றார். »
மேலும்»

 

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீண்டும் மீள்குடியேற்றம் ஆரம்பம்!

[வெள்ளிக்கிழமை, 05-02-2010, 23:55 GMT]

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள். கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் முடிவடையாமமை மற்றும் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் காரணமாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதமடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் மீளக்குடியமர்பவர்களுக்கு உடனடியாகத் தேவையான தற்காலிக வீடுகளை அமைப்பதற்குரிய கூரைத்தகடுகளின் கையிருப்பு முடிவடைந்ததன் காரணமாகவே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தாமதமடைந்ததாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குத் தேவையான கூரைத்தகடுகள் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சினால் கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதையடுத்து, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். »
மேலும்»

 

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு: 1576 கைதிகள் விடுதலை

[வெள்ளிக்கிழமை, 05-02-2010, 23:55 GMT]

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள 37 சிறைச்சாலைகளைச் சேர்ந்த 1576 கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் 62வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பொது மன்னிப்பின் அடிப்படையிலேயே 1576 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளரும், ஊடகப் பேச்சாள ருமான கெனட் பெர்னாட்டோ தெரிவித்தார்.

இந்த பொது மன்னிப்பு பெற்றவர்களில் அதிகமானவர்கள் சிறு சிறு குற்றச்செயல்கள் காரணமாகவும், தண்டப் பணம் செலுத்த முடியாமல் இருந்தவர்களும் ஆவர்.

37 சிறைச்சாலைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட போதிலும் மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளிலிருந்தே அதிக கைதிகள் விடுதலை செய்யப்பட்டு ள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். விடுதலை செய்யப்பட்டவர்களில் பெண் கைதிகளும் அடங்குவதாக கெனட் பர்னான்டோ மேலும் தெரிவித்தார்.

போகம்பரை சிறைச்சாலையில் சிறைக் கைதிகள் 165 பேரும், பள்ளேகல திறந்த வெளி சிறைச்சாலையில் 18 பேரும் விடுதலை செய்யப்பட்டனரென திறந்தவெளி »
மேலும்»

 

பலாலி விமான நிலையத்தைப் புனரமைக்க இந்தியா தீர்மானம்!

[வெள்ளிக்கிழமை, 05-02-2010, 23:55 GMT]

யாழ். பலாலி விமான நிலையத்தைச் சீர்படுத்தி, மேம்படுத்த இந்தியா தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அதேபோன்று நாட்டிலுள்ள துறைமுகங்களை மறுசீரமைத்துத் தரவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக இலங்கைக்கான இந்தியத்தூதுவர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில்,

காங்கேசன்துறை துறைமுகத்தைச் சீர்படுத்தவும், பருத்தித்துறை துறைமுகத்தை சீர்படுத்தவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. அதுபோன்று, பலாலி விமானதளத்தைச் சீர்படுத்தி, மேம்படுத்தித்தரவும் இந்தியா முன்வந்துள்ளது” என்றார்.

முன்னதாக நடந்த நிகழ்ச்சியில், யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சியில் உள்ள இடம் பெயர்ந்த தமிழர்களுக்காக இந்திய அரசு வழங்கும் கூடாரம் அமைக்கத் தேவையான ஷீட்களின் முதல் தொகுதியை இலங்கை »
மேலும்»

 

சுதந்திர தின நிகழ்வை ஒட்டி வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் கையளிப்பு.

[வியாழக்கிழமை, 04-02-2010, 23:55 GMT]

மன்முனைப்பற்று பிரதேச செயலாளர் அமலநாதன் தலைமையில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அப்பிரதேசத்தை அண்டிய வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை வழங்குவதை படங்களில் காணலாம், இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், பிரதேச சபை தவிசாளர் கிருஸ்டினா ஆகியோர் கலந்து கொண்டனர். »மேலும்»

 

பாரிய சவால்களுக்கு மத்தியில் இன்று மீண்டும் ஒரே இலங்கையர் என்ற அடிப்படையில் சுதந்திர தினத்தை கொண்டாடும் அரிய வாய்ப்பு எமக்கு கிட்டியது.கிழக்கு மாகாண முதலமைச்சர்.

[வியாழக்கிழமை, 04-02-2010, 23:55 GMT]

இன்று இலங்கையின் 62வது சுதந்திர தினம் கொண்டாட்டம் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் ஜோர்ச் பிள்ளை தலைமையில் மாநகர வளாகத்தில் நடைபெற்ற சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றிவைத்து உரையாற்றும்போது, பாரிய சவால்களுக்கு மத்தியில் இன்று மீண்டும் ஒரே இலங்கையர் என்ற அடிப்படையில் சுதந்திரதினத்தை கொண்டாடும் வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. எமது இலங்கை திருநாட்டை பொறுத்தவரையில் இன்று கொண்டாடப்படுகின்ற 62வது சுதந்திரதின கொண்டாட்டம் அனைத்து தமிழ் மக்களும் அனுஷ்டிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருப்பது எமக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற »மேலும்»

 

“இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் மன்னர்களே,சுதந்திர தின நிகழ்வில் மகிந்த ராஜபக்ஷ

[வியாழக்கிழமை, 04-02-2010, 23:55 GMT]

“இலங்கையின் ஜனாதிபதி வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே என்பதில் பெருமை கொள்கிறேன்.

அரசியல்வாதிகள் மக்களை ஒரு போதும் தவறான பாதையில் வழிநடத்தக் கூடாது. நான் நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. இனியும் அவ்வாறான செயலை செய்ய மாட்டேன்” என இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சுதந்திர தின வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

“இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் மன்னர்களே. 30 வருட காலத்தில் இந் நாட்டில் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது. அந்த நிலைமையை நான் முற்றாக மாற்றியமைத்தேன்.

வடக்கு கிழக்கில் ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தது. வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் ஆகிய பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாம் அப்பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றோம். அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தமிழில் உரையாற்றுகையில், »
மேலும்»

 

சுதந்திர தின வாழ்த்துச் செய்தி -மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்

[வியாழக்கிழமை, 04-02-2010, 23:55 GMT]

இலங்கை நாடு காலணித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று 62வது சுதந்திர நிகழ்வினை கொண்டாடுகின்ற இவ் வேளையில், எம் நாடடின் சுதந்திரத்திற்காக சொந்த விருப்பு வெறுப்புக்களை மறந்து போராடிய அனைத்து உத்தம உள்ளங்களையும் நினைவுகூர வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும். நாடு சுதந்திரமடைந்து சுபீட்ச பாதையில் சுய ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்காக உயிர் ,உடமைகளை அர்ப்பணித்தவர்கள் தமிழ், முஸ்லிம்,சிங்களம் என வேற்றுமை பார்க்கவில்லை. இதே போல் பல்லின சமுதாயக் கட்டமைப்பைக் கொண்ட இலங்கைத் திருநாட்டில் உள்ள ஒவ்வொருவரும் இன மத, மொழி பேதங்களைக் கூறி தாம் உயர்ந்தவர், மற்றவர் தாழ்ந்தவர் என்ற குறுகிய மனப்பான்மையைக் களைந்து எல்லோரும் இந் நாட்டுப் பிரஜைகள் மனிதர்கள் என்பதை மனதில் நிறுத்தி தாம் பிறந்த பிரதேசத்திற்கும், மாவட்டத்திற்கும், மாகாணத்திற்கும், நாட்டிற்கும் உண்மையானவர்களாக உதட்டளவில் உரிமைகளையும், அபிவிருத்தியையும் »மேலும்»

 

இலங்கையின் 62வது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில் கண்டி மாநகரில் வெகுசிறப்பாக இடம்பெற்றது!

[வியாழக்கிழமை, 04-02-2010, 23:55 GMT]

பயங்கரவாதம் முற்றாக முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் இலங்கை தனது 62ஆவது சுதந்திரதினத்தை இன்று வெகு சிறப்பாக கொண்டாடியது. சுதந்திரதினத்தின் பிரதான நிகழ்வுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டி தலதாமாளிகை வளாகத்தில் இன்று நடைபெற்றன. பயங்கரவாதம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இடம்பெறும் முதலாவது சுதந்திரதின நிகழ்வு இதுவென்பது முக்கியமானது. காலை 8.50 மணிக்கு ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றினார். இதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்த படையினருக்காக இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் மரியாதையின் நிமித்தம் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன. இதன் பின்னர் 9.15 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுமக்களுக்கு சுதந்திரதின உரையாற்றினார். ஜனாதிபதி தனது உரையின் இடையே தமிழ் மொழியிலும் உரையாற்றியமை விசேட அம்சமாகும். இதனைத் தொடர்ந்து முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் காலாசார நிகழ்ச்சிகளும் »மேலும்»

 

அதிகார பகிர்வு குறித்த உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் : கருணாநிதி

[வியாழக்கிழமை, 04-02-2010, 23:55 GMT]

தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்து இலங்கை அரசு முன்னர் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என திமுக கோரியுள்ளதாக அதன் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பில் இந்த மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடும் போது ஒரு தீர்மானம் இயற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுபேற்றுள்ள சிவ்சங்கர் மேனன் சில தினங்களுக்கு முன்னர் தன்னை சந்தித்த போதும் இந்த விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றும் கருணாநிதி கூறியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினியை விடுவிப்பது குறித்து மத்திய அரசுடன் பேசி முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். »
மேலும்»

 

மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் தேசிய கொள்கைத் திட்டம் - அமைச்சர் மஹிந்த சமரசிங்க..!

[வியாழக்கிழமை, 04-02-2010, 23:55 GMT]

இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் தேசிய கொள்கைத் திட்டமொன்று வகுக்கப்பட உள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மனித உரிமை பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கைத் திட்ட வரைவு அண்மையில் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவுத் திட்டம் பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினக்கு விநியோகம் செய்யப்பட்டு கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

கருத்துக்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் இறுதித் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொள்கைத் திட்டம் அமுல்படுத்தப்படுகின்றதா என்பதனை மனித உரிமைகள் »
மேலும்»

 

மன்னார் பொலிஸ் நிலையத்தில் சுதந்திர தின அணிவகுப்பு!

[வியாழக்கிழமை, 04-02-2010, 23:55 GMT]

இலங்கையின் 62 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று மன்னார் பொலிஸ் நிலையத்தில் விசேட சுதந்திரதின அணிவகுப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து மன்னார் பொது வைத்தியசாலையின் உள்ளகப் பகுதிகளில் பொலிஸார் சிரமதானப் பணிகளையும் மேற்கொண்டனர். »மேலும்»

 

சுதந்திரம் ஒவ்வொரு உயிரினமும் எதிர்பார்க்கும் நியாயதர்மம் - பிரதமர்..!

[வியாழக்கிழமை, 04-02-2010, 23:55 GMT]

“சுதந்திரம்” என்பது ஒவ்வொரு உயிரினமும் எதிர்பார்க்கும் நியாய தர்மமாகும். அவ்வாறே ஜனநாய கத்திற்கு மதிப்பளிக்கும் சமூக மொன்றிலே, இருக்க வேண்டிய அடிப்படை இயல்பாகும்” என பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்தார். சுதந்திர தினம் தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியதாவது,பெளத்த நற்குணங்களின் மூலம் வளர்க்கப்பட்ட இலங்கையர்கள் தமது சுதந்திரத்தைப் போன்றே மற்றையவர்களது சுதந்திரத்தையும் மதிக்கும் சிறந்த சமூகத்தினர்.மனிதத்துவத்திற்கு எதிரான மனிதத் தன்மையற்ற மனிதர்களது செயற்பாடுகள் முழு மனித சமூகத் தினதும் சுதந்திரத்தை இல்லாது செய்வதற்கு காரணமாக அமைகின்றது. அனைவருக்கும் சுதந்திரத்தின் பெறுமதி விளங்குவது அதை அனுபவிக்கும் போதன்றி சுதந்திரம் இல்லாதுபோன சந்தர்ப்பத்திலாகும்.வரலாற்றிலே இலங்கையர்களுக்கு சுதந்திரம் இல்லாதுபோன காலகட்டங்கள் இருந்து வந்துள்ளமை பற்றி கடந்த கால வரலாற்றிலே காணப்படுகின்றன. எனினும், அவற்றினை கட்டுப்படுத்து வதற்கான பலமிக்க யுக புருஷர்கள் மக்களிலிருந்தே உருவாகினர்.சுதந்திரம் என்பதனை »மேலும்»

 

கண்டி பல்லேகலவில் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி ஆரம்பித்து வைப்பு

[வியாழக்கிழமை, 04-02-2010, 23:55 GMT]

கண்டி பல்லேகலவில் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி இன்றுமாலை 4.30அளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் ஆரம்பமாகியுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சி எதிர்வரும் 10ம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதன் பிரகாரம் ஒவ்வொருநாளும் மாலை 4மணிமுதல் இரவு 10மணிவரை தேசத்திற்கு மகுடம் கண்காட்சி காண்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கண்காட்சியை முன்னிட்டு கொழும்பு, கண்டிக்கிடையில் ஒவ்வொரு 15நிமிடங்களுக்கிடையில் விசேட பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இ.போ.ச பிரதிப் பொது முகாமையாளர் லிவினிஸ் பமுனுகுல ஆராய்ச்சி தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கென விசேட ரயில்சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின்போது அப்பகுதி பாதுகாப்புக்காக 7000 பொலீசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரின் அனுசரணையும் பெறப்பட்டுள்ளது. »மேலும்»

 

சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜே.சிறீரங்காவுக்கு அச்சுறுத்தல், பாதுகாப்பு அதிகாரிகள்மீது தாக்குதல்

[வியாழக்கிழமை, 04-02-2010, 23:55 GMT]

சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜே.சிறீரங்காவின் பாதுகாப்பு அதிகாரிகள்மீது தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரை கைதுசெய்யப்படவில்லையென்றும், இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். மலையக மக்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக நேற்றையதினம் நுவரெலியா, ஹற்றன் பிரதேசத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அங்கு சென்றிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரசைச் சேர்ந்த ஹற்றன் நகரமேயர் உள்ளிட்ட குழுவினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனையடுத்து ஊடகவியலாளர் ஜே.சிறீரங்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததையடுத்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஜே.சிறீரங்காவின் பாதுகாப்பு அதிகாரியான உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ஜானக்க நந்தசிறீ காயமடைந்தார். »மேலும்»

 

வடக்கு கிழக்கு மீள்குடியேற்றத்துக்கு அமெரிக்கா 3மில்லியன் டொலர் நிதியுதவி..!

[வியாழக்கிழமை, 04-02-2010, 23:55 GMT]

வடக்கு கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா 3மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கத் தீர்மானித்துள்ளதென ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அபிவிருத்தி தொடர்பான அமெரிக்க பிரதிநிதிகளின் ஊடாக இந்நிதி வழங்கப்படவுள்ளது. இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தூதரக வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு தேவையான போக்குவரத்து வசதிகளை அமெரிக்கா ஏற்படுத்திக் கொடுக்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிக்கா புட்டீனாஸ் தெரிவித்துள்ளார். »மேலும்»

 

இலங்கையின் 62வது சுதந்திரதினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு..!

[வியாழக்கிழமை, 04-02-2010, 23:55 GMT]

இலங்கையின் 62வது சுதந்திரதினம் இன்றாகும். இதனை முன்னிட்டு நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுதந்திரதின பிரதான வைபவம் இம்முறை கண்டி, தலதா மாளிகை வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் காலை 8.30 மணிக்கு பிரதான வைபவம் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு கண்டி நகரம் உட்பட அதனை அண்மித்த பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் 10ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிஸாரும் முப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்கு பண்டார, பிரதம நீதியரசர் அசோக்க டி.சில்வா, பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத்அமுனுகம, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர, மத்தியமாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மற்றும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். பாதுகாப்புப் படை சார்பில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப்மார்ஷல் ரொஷான் குணதிலக்க, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். சம்பிரதாய முறைப்படி இம்முறையும் இராணுவம், »மேலும்»

 

சுதந்திரக்கட்சி வேட்பாளர்களை தெரிவு செய்ய நியமன சபைகள் அமைப்பு..!

[வியாழக்கிழமை, 04-02-2010, 23:55 GMT]

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்கீழ் 2010 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை மாகாண மட்டத்தில் தெரிவுசெய்வதற்கான நியமன சபைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தலைமையகத்தால் விநியோகிக்கப்படும் விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்திசெய்து மார்ச் 5ற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டுமென்று சுதந்திரக்கட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். வடமேல் மாகாணம், வட மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணம் ஆகியவற்றுக்கான நியமன சபைக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமை தாங்கவுள்ளார். மேல்மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாண நியமன சபைக்கு அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ண தலைமை தாங்கவுள்ளார். தென்மாகாணம், சப்ரகமுவ மாகாண நியமனசபைக்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமை தாங்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிகமாக மேன்முறையீட்டு சபை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தலைமையில் அமைக்கப்படவுள்ளது. கவலைகளைத் »மேலும்»

 

மடுவில் இருந்து தலைமன்னார் வரையான ரயில்பாதையை புனரமைக்க நடவடிக்கை..!

[வியாழக்கிழமை, 04-02-2010, 23:55 GMT]

மன்னார் மடுவிலிருந்து தலைமன்னார் வரையிலான ரயில்பாதையை புனரமைப்புச் செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி புனரமைப்புப் பணிகளை எதிர்வரும் வாரமளவில் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்கள வர்த்தகப் பிரிவின் அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். 63கிலோமீற்றர் தூரமுடைய குறித்த ரயில்பாதையின் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்திய நிறுவனமொன்றுடன் ஒப்பந்தமொன்றிலும் கைச்சாத்திட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இந்த ரயில்பாதையின் புனரமைப்புப் பணிகளுக்காக 10லட்சத்து 149ஆயிரம் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்படவுள்ளதுடன், எதிர்வரும் 02வருடங்களில் புனரமைப்புப் பணிகளை நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். »மேலும்»

 

17வது திருத்தச் சட்டமூலம் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது -தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு..!

[வியாழக்கிழமை, 04-02-2010, 23:55 GMT]

17வது திருத்தச்சட்ட மூலம் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வாக அமையாதென தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார் 11மணித்தியாலங்கள் கூடி ஆராயப்பட்டதன் பின்னர் இந்த 17வது திருத்தச்சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டதாகவும் இந்த சட்டமூலத்தில் பயனில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டமூலத்திற்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 215பேர் ஆதரவளித்தபோதிலும் இதனை நடைமுறைப்படுத்தும் சரியான பொறிமுறை குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார் 1978ம் ஆண்டு அரசியல் சாசனத்தில் 17வது திருத்தச்சட்டமூலம் ஆகியன அவசரமாக ஏற்படுத்தப்பட்டதாகவும் இதனால் இதன் பலன்கள் குறித்து நம்பிக்கை கொள்ளமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். உரிய முனைப்புடன் குறித்த அரசியல் சாசன திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டிருந்தால் பல்வேறு நன்மைகள் கிட்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். »மேலும்»

 

வவுனியா மதியாமடு பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் பூர்த்தி..!

[வியாழக்கிழமை, 04-02-2010, 23:55 GMT]

வவுனியா மதியாமடு பிரதேசத்தில் கண்ணி வெடி மிதிவெடி அகற்றும் பணிகள் பூர்தியடைந்துள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பீ எஸ் எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கான முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் எதிர்வரும் நாட்களில் மதியாமடு பிரதேசத்தில் சுமார் 300 குடும்பங்கள் மீள் குடியேற்றப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை நேற்றைய தினம் பூநகரி பிரதேசத்தில் ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் மீள்குடியமர்த்தப்பட்;டமை குறிப்பிடத்தக்கது. »மேலும்»

 

கொழும்பில் எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டம்! பிரதான வீதிகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன!

[புதன்கிழமை, 03-02-2010, 23:55 GMT]

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 10ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டம் காரணமாக லிப்டன் சுற்றுவட்டத்தைச் சூழவுள்ள அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டுள்ளன. டி.பி.ஜயா மாவத்தை, யூனியன் பிளேஸ் உள்ளிட்ட சன நடமாட்டம் அதிகமாகவுள்ள பகுதிகளின் பிரதான பாதைகளும் மூடப்பட்டுள்ளன. »மேலும்»

 

ராஜினாமாச் செய்யும் முடிவினை தேர்தல் ஆணையாளர் கைவிட்டார்

[புதன்கிழமை, 03-02-2010, 23:55 GMT]

ஜனாதிபதி தேர்தலின்பின்னர் தனது பதவியிலிருந்து ராஜினாமாச் செய்யவுள்ளதாக அறிவித்த தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா அம்முடிவினை கைவிட்டுள்ளார்.

இன்று காலை ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர் தான் ராஜினாமாச் செய்யவுள்ளதாக முன்னர் அறிவித்திருந்த போதும் பல்வேறு அரசியல் கட்சிகளினதும் தனது தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்களினதும் வேண்டுகோளை ஏற்று தனது முடிவினை மாற்றிக்கொண்டு தமது சேவையினை நீடிக்கவுள்ளதாக தெரிவித்தார். »
மேலும்»

 

பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளில் ஒருபகுதி எரிக்கப்பட்ட நிலையில் கழிவு வாய்க்காலில் மகாநாயக்கர்களிடம் காண்பித்தது ஐ.தே.மு.!

[புதன்கிழமை, 03-02-2010, 23:55 GMT]

எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளில் பெருந்தொகையானவை எரிக்கப்பட்டு கழிவு வாய்க்காலில் வீசப்பட்டுக்கிடந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசிய முன்னணி தெரிவித்திருப்பதுடன், இது தொடர்பாக மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடமும் முறையிட்டுள்ளது.

ஐ.தே.மு.வின் சிரேஷ்ட தலைவர்களான கருஜயசூரிய, திஸ்ஸ அத்தநாயக்க, ரவூப் ஹக்கீம், ரேணுகா ஹேரத், காமினி ஜயவிக்கிரமபெரேரா உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மல்வத்த பீட மகாநாயக்க தேரர், திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்ந்த சுமங்கலவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக அவரிடம் முறையிட்டனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் எரிக்கப்பட்ட நிலையில் பல ஆவணங்கள் கழிவு வாய்க்கால்களில் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அளிக்கப்பட்ட 64 வாக்குச் சீட்டுகள் அதில் இருந்ததாகவும் இது போன்று பல வாக்குச் சீட்டுகள் »
மேலும்»

 

யாழ் மாவட்ட வாக்காளர் பட்டியலில் குழப்பநிலை!

[புதன்கிழமை, 03-02-2010, 23:55 GMT]

யாழ்ப்பாண மாவட்ட வாக்காளர் பட்டியலில் பதிவாகியுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அங்கு வாக்காளர்கள் வதிவிடமாக இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநயக்கா தெரிவித்தார். தேர்தல் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இநதத் தகவலை வெயளியிட்டார்.

யாழ்ப்பாண மாவட்ட வாக்காளர் பட்டியலில் 7 இலட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்கள் பதிவாகியுள்ள போதிலும் அங்கு அதனைவிடக் குறைவான எண்ணிக்கையிலேயே வாக்காளர்கள் தற்போது வசித்து வருகின்றனர்.

பெரும்பாலானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இன்னும் பலர் இந்தியாவில் தங்கி வருகின்றனர். இதேவெளை பலர் வெளிநாடுகளில் உள்ளனர். சிலர் அங்கு குடியுரிமையும் பெற்றுள்ளனர். இது போன்ற காரணங்களால் எண்ணிக்கை »
மேலும்»

 

26 இலட்சம் டொலர் பெறுமதியான கூரைத் தகடுகள் இந்தியா கையளிப்பு..!

[புதன்கிழமை, 03-02-2010, 23:55 GMT]

வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்திற்கென இந்திய அரசாங்கம் 2,644,200 டொலர் பெறுமதியான கல்வனைஸ் கூரைத் தகடுகளை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதுடன் அதன் முதற் தொகுதி இன்று கையளிக்கப்படவுள்ளது. இன்று காலை இவ்வைபவம் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளதுடன் இந்திய அரசாங்கத்தின் சார்பில் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் காந்த் ஜனாதிபதியின் ஆலோசகரும் வடக்கின் வசந்தம் அபிவிருத்திச் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷவிடம் தகடுகளைக் கையளிக்கவுள்ளதாக தேச நிர்மாண அமைச்சு தெரிவித்தது.

இன்றைய இவ்வைபவத்தின் போது 500 மெற்றிக்தொன் கல்வனைஸ் தகடுகளைக் கொண்ட 19 கொள்கலன்களை இந்திய உயர்ஸ்தானிகரிடமிருந்து பசில் ராஜபக்ஷ எம்.பி. பெற்றுக்கொள்ளவுள்ளார். இதன் பெறுமதி 50,8347.45 அமெரிக்க டொலராகுமென மேற்படி அமைச்சு தெரிவித்தது. »
மேலும்»

 

புலிகளின் GTV செய்தியாளருக்கு நெடியவன் குழு மிரட்டல்!

[புதன்கிழமை, 03-02-2010, 23:55 GMT]

லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் புலிகளின் GTV செய்தியாளருக்கு புலிகளின் நெடியவன் குழு மிரட்டல் விடுத்துள்ளது. அண்மையில் லண்டனில் இடம்பெற்ற வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பான வாக்களிப்பு குறித்த உண்மை செய்திகளை வெளியிட்டதே மேற்படி செய்தியாளருக்கு கொலை அ