|
கிழக்கு மாகாணம் ஐ.ம.சு.முன்னணியின் வசம்.
[ஞாயிற்றுக்கிழமை,
11-05-2008, 08:12 GMT]
நேற்று இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இருபது ஆசனங்களை கைப்பற்றி கிழக்கு மாகாணத்தை தம் வசப்படுத்தி அமோக வெற்றியினை பெற்றுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் முறையே 6,8,4 ஆசனங்களையும் இரண்டு போனஸ் ஆசனங்களையும் கைப்பற்றி மொத்தமாக இருபது ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டிருக்கின்றது.
«மேலும்»
அம்பாறை குண்டுத் தாக்குதலுக்கு ஜனாதிபதி பலத்த கண்டனம்.
[ஞாயிற்றுக்கிழமை,
11-05-2008, 08:08 GMT]
அம்பாறை நகரில் உணவு விடுதிக்குள் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலை ஜனாதிபதி டமஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்துள்ளார். அப்பாவி பொது மக்களை இலக்குவைத்து புலிகள் மேற்கொண்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதல் எனத் தெரிவிக்கும் ஜனாதிபதி, தாக்குதலில் உயிரிழந்த, காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளார்.
«மேலும்»
முதன்மை வேட்பாளரும், த.ம.வி. புலிகளின் பதில் தலைவருமான பிள்ளையான் வாக்களிப்பு – ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியென பெருமிதம்.
[ஞாயிற்றுக்கிழமை,
11-05-2008, 08:02 GMT]
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பதில் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டு மாவட்ட முதன்மை வேட்பாளருமான பிள்ளையான் இன்று வாக்களித்துள்ளார். கல்குடா தொகுதிற்குட்பட்ட வாழைச்சேனை, பேத்தாளை விபுலானந்தா வித்தியாலயத்தில் அமைந்திருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கினை அளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
«மேலும்»
22 வருட காலத்தின் பின் கிழக்கில் மிகவும் சுதந்திரமானதொரு தேர்தல் -- கிழக்கு ஆளுநர்.
[ஞாயிற்றுக்கிழமை,
11-05-2008, 08:00 GMT]
கிழக்கு மாகாணத்தில் கடந்த 20 வருடங்களின் பின்னர் சுதந்திரமானதும், அமைதியுமானதுமான தேர்தல் ஒன்று நடைபெற்றிருக்கிறதென கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் அமைதியற்ற சூழலும், அச்சுறுத்தல்களும், தாக்குதல்களும் என அமைதியற்ற சூழலில் வாழ்ந்த மக்களை நிம்மதியாக,
«மேலும்»
ரணில் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் நன்மை செய்யவேயில்லை – அமெ. இஸ்லாமிய மன்றத் தலைவர் ரிசாட்சாலி.
[சனிக்கிழமை,
10-05-2008, 08:08 GMT]
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம் மக்களுக்கு எவ்வித நன்மையையும் எக்காலத்திலும் செய்ததில்லை. கிழக்கு மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையைப் பெற்றுக் கொடுத்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்க வேண்டுமென அமெரிக்க இஸ்லாமிய ஒத்துழைப்பு மன்றத்தின் தலைவர் ரிசாட் சாலி தெரிவித்தார்.
«மேலும்»
அம்பாறை நகரில் ஹோட்டலொன்றினுள் குண்டுவெடிப்பு; 11 பேர் பலி; 30 பேர் காயம்.
[சனிக்கிழமை,
10-05-2008, 08:05 GMT]
அம்பாறை நகரில் நேற்று மாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டு, 30 பேர் காயமடைந்துள்ளனர். அம்பாறை – கல்முனை வீதியிலுள்ள ‘சிற்றி கஃபே அன்ட் பேக்கரி’ என்ற ஹோட்டல் ஒள்றின் உள்ளேயே குண்டு வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
«மேலும்»
அடம்பனின் தெற்கே ஒரு சதுர கிலோமீற்றர் பரப்பு படையினர் வசம்.
[வெள்ளிக்கிழமை,
09-05-2008, 09:04 GMT]
மன்னார் அடம்பன் பிரதேசத்தின் தெற்கே இரண்டு சதுர கிலோமீற்றர் பரப்பு நேற்று மாலை முதல் முழுமையாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார். அடம்பன் பிரதேசத்தின் தெற்கை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் இராணுவத்தினர் நேற்றுக் காலை முதல்
«மேலும்»
முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்த ஹக்கீமுக்கு மாகாண சபை தேர்தல் பாடம் கற்பிக்கும் -- ஜனாதிபதியின் ஆலோசகர் அஸ்வர்.
[வெள்ளிக்கிழமை,
09-05-2008, 08:12 GMT]
பலஸ்தீன மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கின்ற இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கி வரும் ரணிலுடன் கூட்டுச் சேர்ந்துள்ள ரவ+ப் ஹக்கீம் சர்வதேச உலகையே ஏமாற்றி வருகின்றார். முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்துள்ள இவருக்கு மாகாண சபை தேர்தல் சரியான பாடத்தைப் புகட்டவுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர் கூறினார்.
«மேலும்»
நேற்றும் மோதல்கள் 17 புலிகள் பலி: 4 படையினர் காயம்.
[வெள்ளிக்கிழமை,
09-05-2008, 08:10 GMT]
வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் வெலிஓயா பகுதிகளில் இராணுவத்தினருடனான மோதலின் போது பதினேழு புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் அதிக எண்ணிக்கையான புலிகள் காயமடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. இப் பிரதேசங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது நான்கு படை வீரர்கன் காயமடைந்துள்ளதாகவும் ஊடக மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
«மேலும்»
கிழக்கு தேர்தலில் கூடுதல் ஆசனங்களுடன் ஐ.ம.சு. முன்னனி nரு வெற்றி பெறும் -- அமைச்சர் மைத்திரிபால சிறிசேன.
[வெள்ளிக்கிழமை,
09-05-2008, 08:06 GMT]
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 19 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றி கெறுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புலிகள் இயக்கத்தினர் ஐ.தே.க. மற்றும் மு.கா கூட்டின் ஊடாக மீண்டும் கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.
«மேலும்»
|