|
களுவாஞ்சிக்குடியில் துப்பாக்கிச்சூடு – உபதவிசாளர் உட்பட இரு போராளிகள் வீரமரணம்.
[திங்கட்கிழமை,
02-06-2008, 02:20 GMT]
களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் களுவாஞ்சிக்குடிப் பிரதேச சபையின் உபதவிசாளரும் மற்றுமொரு உறுப்பினரும் வீரமரணமடைந்துள்ளனர். அண்மையில் இடம் பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டி களுவாஞ்சிக்குடி பிரதேச சபையின் உபதவிசாளராக
«மேலும்»
இன முரண்மாட்டை தணிக்க முதலமைச்சரின் ஏற்பாட்டில் இன நல்லிணக்க பணியகம் ஆரம்பம்.
[திங்கட்கிழமை,
02-06-2008, 09:30 GMT]
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தோற்றுவிக்கப்படுகின்ற இன முரண்பாட்டை தீர்ப்பது தொடர்பான உயர்மட்டக் குழுக் கூட்டம் ஒன்று இன்று முதலமைச்சரின் மட்டக்களப்பு இணைப்புக் காரியாலயத்தில் கௌரவ முதலமைச்சரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. அண்மைக்காலமாக திட்டமிடப்பட்ட முறையில் சமூகங்களுக்கிடையில் ஏற்படுத்தப்படுகின்ற முரண்பாடுகள் இதன் மூலமாக சமூகங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகள்
«மேலும்»
[,
--, : GMT]
«மேலும்»
இராணுவத் தளபதி வவுனியா விஜயம்.
[திங்கட்கிழமை,
02-06-2008, 08:24 GMT]
மன்னார், வெலிஓயா பிரதேசங்களில் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா வன்னிப் பிராந்தியத்துக்கான விஜய மொன்றை மேற் கொண்டார். வவுனியா, இராணுவத் தலைமையகத்துக்கு விமானம் மூலமாக சென்ற இராணுவத் தளபதியையும் ஏனைய இராணுவத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளையும் வவுனியா இராணுவ முகாமைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஏ.டி அமரதுங்க வரவேற்றார்.
«மேலும்»
புத்தளத்தில் நால்வர் கடத்தல்.
[திங்கட்கிழமை,
02-06-2008, 08:22 GMT]
புத்தளத்தில் இருவேறு பகுதிகளில் நேற்று முன்தினம் நான்குபேர் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். புத்தளம் கருவலகஸ் வௌ பகுதியில் கிறிஸ்தவ கல்வாரி சபையை நடத்திவந்த கந்தையா சிவகுமார் என்ற போதகரும் அவரது உதவியாளரும் இனம் தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
«மேலும்»
வவுனியாவில் தொண்டர் நிறுவனத்தில் 30 இலட்சம் ரூபா பொருட்கள் கொள்ளை.
[திங்கட்கிழமை,
02-06-2008, 08:20 GMT]
வவுனியா தெற்கு இலுப்பைக் குளம் பிரதேசத்தில் நோர்வே அரசின் உதவியுடன் இயங்கிவரும் சொலிடார் என்ற அரசசார்பற்ற நிறுவனத்தில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஆயுதம்தாங்கிய சிலர் இவ் வலுவலகத்தினுள் நள்ளிரவு நேரத்தில் புகுந்து அங்கு பாதுகாப்பு படைமையில் ஈடுபட்டிருந்த காவலாளியை அச்சுறுத்தி கட்டிவைத்துவிட்டே இக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
«மேலும்»
வடபகுதி மோதல்களில் 09 புலிகள் பலி.
[திங்கட்கிழமை,
02-06-2008, 08:14 GMT]
வடக்கின் பல்வேறு பிரதேசங்களில் நேற்று இடம் பெற்ற மோதல்களில் 09 வன்னிப் புலிப்பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கின் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், மணலாறு ஆகிய பிரதேசங்களில் வன்னிப்புலி பயங்கரவாதிகளின் மீது இராணுவத்தின் மேற் கொண்ட வெற்றிகரமான தாக்குதல்களிலே 09 புலிப்பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதுடன் பெருமளவானோர் காயமடைந்திருப்பதாகவும்
«மேலும்»
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு விஷேட பாதுகாப்பு.
[திங்கட்கிழமை,
02-06-2008, 08:10 GMT]
கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களுக்கு விஷேட பாதுகாப்பினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் வேட்பாளர்களாக இருக்கும் போது வழங்கப்பட்ட பாதுகாப்பினை விட கூடுதலான
«மேலும்»
யாழ் குடாவில் அரசியின் விலை என்றுமில்லாதவாறு உயர்வு.
[திங்கட்கிழமை,
02-06-2008, 08:05 GMT]
யாழ் குடாநாட்டில் என்றுமில்லாதவாறு அரிசியின் விலை உயர்வடைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக அரிசி அதிபரினால் கொழும்பிலிருந்து அரிசி எடுத்து வரப்பட்டததினாலேயே அரிசியின் விலை உயர்வடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். மாவட்டத்தில் மாதாந்தம் 1600 மெற்றிக் தொண் அரிசி
«மேலும்»
சிலாபம் -- மைனாத்தீவில் தற்கொலை அங்கிகள் மீட்பு சந்தேகத்தின் பேரில் மூவர் கைது.
[திங்கட்கிழமை,
02-06-2008, 08:00 GMT]
சிலாபம், அழுத்வத்தை பகுதியூடாகச் செல்லும் மைதானத்தீவு பகுதியிலிருந்து ஐந்து தற்கொலையங்கிகளை பொலிஸார் நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளனர். சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீ 4 ரக வெடி மருந்துகள் நிரப்பட்ட நிலையில் 4 தற்கொலை அங்கிகளும் வெற்று தற்கொலையங்கியொன்று புதைக்கப்பட்டு வைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
«மேலும்»
|